"இதுகாணக் கிடைக்காத காட்சி ! இளங்கதிர்க் குளிர்போன்ற
தோற்றம் !
அதுஆன்ம நிர்வாணக் கோலம் ! அழகுடை
ஜோதிஸ்வ ரூபம் !
புதுப்பூவின் மகரந்த வாசம் பொழிகிற உரைதனிலே வீசும் !
"விதுசேக ரபாரதீ"யின் பாதம்
வினைகளை விரட்டுகிற வேதம்! (1)
(அறுசீர்
விருத்தம் வாய்பாடு :காய் , காய், மா , விளம் , காய் , மா )
கற்கவே விரும்புகிற உள்ளம் , கற்றதையே பகிர்கின்ற பண்பு !
உற்றதோர் குருநிழலாய்க் கொண்டு ஊறிவரும் குருவம்ச ஞானம் !
பற்றினைத் தீயிட்ட பார்வை
! பரமனையே மனம்வைத்த சுத்தர் !
நெற்றியில் விழிவைத்த ஈசன் "விதுசேக ரபாரதீ"யாய் வந்தார்!" (2)
(அறுசீர்
விருத்தம் வாய்பாடு :விளம் , காய், மா ,
காய் , காய் , மா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக