பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

"ஆனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ விதுசேகர பாரதீ"

"இதுகாணக் கிடைக்காத காட்சி ! இளங்கதிர்க் குளிர்போன்ற தோற்றம் !
அதுஆன்ம நிர்வாணக் கோலம் ! அழகுடை  ஜோதிஸ்வ ரூபம் !
புதுப்பூவின் மகரந்த வாசம் பொழிகிற உரைதனிலே வீசும் !
"விதுசேக ரபாரதீ"யின் பாதம்  வினைகளை விரட்டுகிற வேதம்!        (1)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு :காய் , காய், மா , விளம் , காய் , மா )

கற்கவே விரும்புகிற உள்ளம் , கற்றதையே பகிர்கின்ற பண்பு !
உற்றதோர் குருநிழலாய்க் கொண்டு ஊறிவரும் குருவம்ச ஞானம் !
பற்றினைத்  தீயிட்ட பார்வை ! பரமனையே மனம்வைத்த சுத்தர் !
நெற்றியில் விழிவைத்த ஈசன் "விதுசேக ரபாரதீ"யாய் வந்தார்!"   (2)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு :விளம் , காய், மா , காய் , காய் , மா )

(தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 37வது பீடாதிபதியை "ஸ்ரீவிதுசேகர பாரதீ" என்று யோகப் பட்டம் தந்து தமது சிஷ்யராக ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் அவர்கள் 23.01.2015  வெள்ளிக் கிழமை அன்று தமது உத்திராதிகாரியாக சிஷ்யஸ்வீகாரம் செய்தார்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக