பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

உத்தம இல்லன்

ஓடுது ஓடுது மாட்டுவண்டி - எந்த
ஊரினைத் தேடியே போகுதடி
காடது மேடது தேடியுடன் - என்
காளையைக் கண்டிடப் போகுதடி ! .....(ஓடுது ஓடுது)...     (1)

அணையிலே நீரிலே அள்ளிவைத்து - என்னை
அணைத்தவர் நெஞ்சிலே புள்ளிவைத்து
துணையென நீயெனச் சொன்னபோது - என்
துணிவினை மெச்சியே பொட்டுவைத்தார் ! .....(ஓடுது ஓடுது)...  (2)

வாழ்த்திட தேவதை வேண்டுமென்றேன் - உன்
மனத்திடம் ஓங்கிய சக்தியென்றார் !
ஊழ்வினை மந்திர(ம்) ஏதுமில்லை - நெஞ்சில்
உத்தமக் காதலே ஒட்டுமென்றார் !.....(ஓடுது ஓடுது)...   (3)

பாரதி பாட்டினைப் பண்ணுடனே - நான்
பாடிய போதிலே கண்பனித்தார் !
ஏழடி வைத்திடக் கால்பிடித்தார் - நான் 
இல்லற உத்தமன் கைபிடித்தேன் ! .....(ஓடுது ஓடுது)...  (4)


                                 (03.04.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக