பொருனை

பொருனை

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

"அம்மா"

உயிருள் உயிரைக் காத்து
 ஒருநாள் வெளியில் விட்டு
பயிலும் பாச மெல்லாம்
  பாலுடன் ஊட்டி வந்து
வெயிலும் மழைக்கு முள்ள
  வேற்றுமை உணர்வு காட்டிப்
பயிரைப் பசுமை யாக்கிப்
   பருவத்தில் நடக்க விட்டாள் !


விட்ட தொரு வேகம்
  விளக்க மேதும் இன்றிக்
கட்டை இதுசுகம் தேடிக்
   கட்ட றுந்துபோய்த் தானே
தொட்ட தோபல துன்பம் !
    சூழ்ந்துள கூட்ட மெல்லாம்
விட்டு வெகுதூர மோட
   விலகா தென்னரு கிலே

பொட்டாகப் பொலிந்து நிற்ப்பாள்!
  பூமியின் புழுதிக் காற்றை
சிட்டுநான் சுவாசித் தாலோ
  சிந்தையில் நொந்து போவாள் !
கெட்டு நான்போன போதும்
  கீழ்மையில் கிழிந்த போதும்
கொட்டிய தன்கண்ணீ ராலும்
  குழந்தை எனைவாழ்த்தி நாளே !           

திட்டினேன் ! கோபப்புய லாகப்
  பேசியும் தீர்த்தேன் ! நாவால்
சுட்டேன் ! அன்பு கூறும்
   தூய மொழியெ லாமும்
தட்டிக் கழித்தேன் ! வாழ்வில்
  தடம்புரண் தழுத என்னைக்
கட்டி அணைத்து அன்பு
  காட்டிய கைகளைப் பார்த்து

வெட்கிப் போனேன் ! தீது
  பேசி வேட்டை நாயாய்க்
கொட்டிய வார்த்தை எல்லாம்
  குழந்தையின் மழலை என்றாள் !
மட்டிலா மனதின் ஊற்று
  மண்விண் பிரவாக மாகத்
தட்டின்றிச் செழிப்ப தென்றால்
  அம்மம்மா அனைத்தும் நீயே !

                  (20.09.1982)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக