பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

"என் அப்பா"

1  ஆற்றில் குளிக்க அழைத்துப்போய் நீச்சலுடன்
     காற்றை அடக்கிநற் காயத்ரி- நாற்றை
     மனதில் பதிந்திட வைத்தயென் அப்பா
     எனதுள் உறையும் உயிர்.

2.  சட்டைப்பைக் குள்ளே சலசலக்கும் காசெல்லாம்
      சட்டெனக் காணாது சாய்ந்தந்த - விட்டத்தைப்
      பார்ப்பார்எடுத்த பயல்நான் அவர்மடியில்
      நார்போல் கிடப்பேன் நரி.

3.  கடுஞ்சொல் வசையாகக்  கண்டிக்க மாட்டார்!
      படும்கை தடவி, பதியும் -  நெடிய
      பகைமறக்கப்  பாசத்தால் பண்பெனும்   நல்ல
      நகைபூட்டும் அப்பா நண் பன்.

4.  அப்பாவின் சம்பளநாள் அக்காவுக் கும்எனக்கும் 
      எப்பவுமே கொண்டாட்டம்அந்நாளை - இப்போதும்
      எண்ணினால்  அல்வாபோல் என்னுள் இனிப்பதனால்
      கண்ணின் மணிஅப்பா காண்.

5. சாப்பாட்டு வேளை சரிசமமாய் உட்கார்ந்து
     கூப்பாடு போடாமல் கொஞ்சம்நீ - ஆக்காட்டு,
     என்றே பரிவாக இன்னமுது ஊட்டிவிட்ட
      என் அப்பா என்றும் இறை.
     

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக