பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

உள்ளொளி பெருக்கு

"ஒளியையே பார்த்துப் பார்த்து
  ஒளிபெறும் கண்கள் ; சாந்திக்
களியையே உணர்ந்து நிற்கும்
 கனிவுடை நெஞ்சம் ; கூர்த்த
உளியையே நட்ப்பாய்க் கொண்டு 
  உயிர்பெரும் சிறப்பம் ;  மோன
வெளியையே விரும்பி ஏற்கும்
 வினையிலா ஞான வாழ்க்கை;            (4)

இனியதைக் கொண்டு கொண்டே
 இருப்பதில் நிறையும் எண்ணம்
இனிவரும் காலம் எல்லாம்
 இன்பமே என்று சொல்லும் !
அனைவரும் ஒன்று கூடி
 அடுத்தவர் நலமே போற்றி
தினையொரு பொழுதி ருந்தால்
 தீவினை மாய்ந்து போமே!"                (8)

              ( 14.10.2014   8.30 am)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக