பொருனை

பொருனை

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

"அவரிருதாள் போதாதோ"

சிறுவயது முதற்கொண்டு சிவனையும் மாலனையும்
சிறுகாலைப் பொழுதுமுதல் சிந்தையிலே வைத்ததனால்
சிறுமையாம் பேதங்கள் சேராத மதிகொடுத்து
சிறுவநெனை நெறிசெய்த சிதம்பரனை மறப்பேனோ !     (4)


குருடனாகிக் குலவழியைக் கொள்ளாத வீணான
திருடநெனைதிருத்திடவே தெளிந்தவோர் நல்ஞான
குருதாளில் விழவைத்துத்  தொடர்பிறப்பை துண்டிக்க
அருள்செய்த அம்மையப்பன் அவனின்றி யாரெனக்கே !   (8)

சங்கரநா ராயணனைச்  சரியாகப் புரியவைத்த
பங்கிற்கு குருபாதப் பரம்பரையைத் தொழவேண்டும் !
எங்கிருந்து நினைத்தாலும் எளியனிவன் பரம்பரையை
அங்கிருந்தே காத்தருள்வார் ! அவரிருதாள் போதாதோ!   (12)

நெல்வயலில் இளங்காற்று நெற்றிதொட்டு வாழ்துதல்போல்
பல்முளைக்கும் முன்னேயே பாலுடனே பண்பூட்டி
நல்வயலாய்ப் பிறப்பினையே நற்பயிராய்ச் செய்தவளை
எல்லையிலா பராசக்தி என்பதிலே பொய்யுண்டோ?             (16)
( வாய்பாடு: காய், காய், காய், காய்....".தரவு கொச்சக் கலிப்பா" )

                     (08.06.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக